அதிக பனிமூட்டம் சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

மலையகத்தில் தொடர்ந்து மழையுடனான காலநிலை நிலவுவதால் நுவரெலியா மாவட்டத்தில் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

எனவே ஹட்டன் நுவரெலியா , வெலிமட, கண்டி வீதிகளில் பயணிக்கும் வாகனச் சாரதிகள் அவதானத்தோடு வாகன விளக்குகளை ஒளிரவிட்டு வாகனங்களைச் செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.