விபச்சார விடுதி முற்றுகை: நான்கு பெண்கள் சிக்கினர்.
![](https://www.ceylonmirror.net/wp-content/uploads/2020/07/201712300229043079_Promoted-by-false-documents-Government-official-arrested_SECVPF-768x524-1.jpg)
கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விபச்சார விடுதியொன்றை இன்று அதிகாலை சுற்றிவளைத்த பொலிஸார், நான்கு பெண்களையும் கைதுசெய்துள்ளனர்.
குறித்த விடுதியை நடத்திச் சென்ற பெண்ணொருவரும், விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்தனகல்ல, தெஹியத்தகண்டிய, கல்பிட்டிய மற்றும் நுகவெல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26 – 50 வயதுக்குட்பட்டவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடம் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.