சஹ்ரானின் மனைவி கோரிய பிணை மனு நிராகரிப்பு.

ஏப்ரல் 21 தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி கோரிய பிணை மனு மட்டக்களப்பு உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகரானின் மனைவி விண்ணப்பித்த பிணை மனுவை இன்றைய தினம் மட்டக்களப்பு மேல் நீதி மன்றத்தில் நீதிபதி நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சஹ்ரானின் மனைவி தரப்பு சட்டத்தரணி ஊடாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட பிணை மனு விண்ணப்பத்தின் பிரகாரம் கொழும்பு புலனாய்வுத் துறையினரால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு சகரானின் மனைவி அழைத்துவரப்பட்டார்.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா முன்னிலையில் முன்னிலைப்படுத்தியபோது அவரது பிணை மனுவை நீதிபதி நிராகரித்துள்ளார்.

குறித்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.