நெற்பயிர்ச்செய்கையினைப் பாதுகாக்கும் பொருட்டு வான்கதவுகள் திறப்பு.

யாழ். மாவட்டத்தின் பெரும்போக நெற்பயிர்ச்செய்கையினைப் பாதுகாக்கும் பொருட்டு வான்கதவுகள் திறப்பு – அங்கஜன் இராமநாதன் நடவடிக்கை.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, யாழ். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையினை கருத்திற்கொண்டு யாழ். மாவட்டத்தின் மறவன்புலவு, நாவற்குழி பெரும்போக நெற்செய்கையினைப் பாதுகாக்கும் பொருட்டு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்களது அறிவுறுத்தலுக்கமைய, செம்மணி மற்றும் தொண்டைமானாறு நீரேந்தும் பிரதேசங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மேலும், குறித்த விவசாய நிலங்களைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, கடல்நீர் மட்டம் உட்புகா வண்ணம் பாதுகாப்பதற்கும் பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.