அதிபர்கள், ஆசியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக 30,000 மில்லியன் ரூபா.

அதிபர்கள். ஆசியர்களின் சம்பள முரண்பாடை தீர்பதற்காக, 2022 வரவு செலவுத் திட்டத்தில் 30,000 மில்லின் ரூபா ஒதுக்கீட்டுக்கான முன்மொழிவை நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (12) வரவு செலவு திட்டத்தை சமர்பித்து இதனை அவர் குறிப்பிட்டார். இதேவேளை, சிகரட் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பதும், வரவு செலவுத் திட்டத்தில் சிகரட் மற்றும் கலால் வரியை அதிகரிப்பதற்கான முன்மொழிவை நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (12) வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து இதுதொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில், சிகரட்டுக்கான வரி 5 ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது. இத்துடன் கலால் வரியும் அதிகரிக்கப்படுவதினால் 25 பில்லியன் ரூபா மேலதிக வருமானம் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
இதுதொடர்பான விசேட வரத்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.