அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள்….

அரச ஊழியர்களுக்கு மீண்டும் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீட்டை நிதியமைச்சர் பசில் ராஜபக்க்ஷ முன்மொழிந்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (12) வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து இதுதொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில், 2014 ஆம் ஆண்டில் அரச ஊழியர்களுக்கு 146,381 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. மீண்டும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

முன்னர் மோட்டார் சைக்கிள்களை பெற்றுக்கொள்ளாத அரச ஊழியர்களுக்கு இதனை வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.