வாகன இறக்குமதிக்கு சலுகைகள் வழங்கப்படாமையால் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு.

எதிர்வரும் (2022) வருடத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் வாகன இறக்குமதிக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படாது என்பதால், வாகனங்களின் விலைகள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் காலங்களில் வாகனங்களின் விலை குறைப்பை எதிர்பார்க்க முடியாது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.

மேலும், அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகரிக்கும் வரை வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என்று கூறிய அவர், மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு குறைந்த விலையில் வாகனங்களை வாங்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையால் வாகனங்களின் விலை மேலும் உயரும் என்று கூறிய அவர், இந்த நிலை வாகனத்துறைக்கும், நுகர்வோருக்கும் பாதகமாக அமையும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.