சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் முதல் முறையாக கச்சா எண்ணெய் இல்லாமல் மூடப்படுகிறது

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று (15) முதல் தற்காலிகமாக மூட தீர்மானித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் மூடப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

நாளை பிற்பகல் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க ஆகியோர் நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதற்கு கச்சா எண்ணெய் பற்றாக்குறையே காரணம் எனவும், கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் டிசம்பர் மூன்றாவது வாரம் வரவுள்ளமையினால் அதுவரை சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

டிசம்பரில் வரவிருக்கும் கச்சா எண்ணெய் கப்பலில் இருந்து 90,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் 15 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்றும், ஜனவரி நடுப்பகுதியில் மீண்டும் கிடைக்கும் என்றும் தெரிகிறது.

இதேவேளை, எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாது எனவும், நாட்டில் போதியளவு கையிருப்பு இருப்பதாகவும், எண்ணெய் தட்டுப்பாடு இருந்தால் அதற்கு முன்னதாகவே தெரிவிப்பதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.