காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்

தெலங்கானா மாநிலம் ஜெய்சங்கர் பூபாலப்பள்ளியைச் சேர்ந்த பலகல ஹர்ஷவர்தன் ரெட்டி(21). விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பிரத்யூஷா(20) ஆகியோர் கடந்த ஆண்டு பஞ்சாபில் பி.டெக் முடித்தனர். இன்ஜினியரிங் முடித்த ஹர்ஷவர்தன் ரெட்டி ஹைதராபாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்குச் வந்த ஹர்ஷவர்தன் ரெட்டி, தான் வந்ததைப் பற்றி பிரத்யூஷாவுக்கு போன் செய்து தெரிவித்தார். அவரும் கல்லூரி நண்பர் என்பதால் நேற்று இரவு ஹர்ஷவர்தன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்தார். அப்போது ஹர்ஷவர்தன் அந்த பெண்ணிடம் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதனை பிரத்யூஷா நிராகரித்ததால் ஆத்திரமடைந்த ஹர்ஷவர்தன் பிரத்யூஷா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். பின்னர் தன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். ஹோட்டல் அறையில் இருந்து தீ மற்றும் புகை வருவதைக் கண்டு ஊழியர்கள் போலீஸாருக்கும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 62 சதவீத தீ காயத்துடன் ஹர்ஷவர்தனும், 61 சதவீத தீ காயங்களுடன் இளம் பெண்ணும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இருவரையும் விசாகப்பட்டினம் கே.ஜி.எச் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்தனர் போலீசார், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.