ஹெரோயினுடன் ஐவர் வசமாக சிக்கினர்!

பொலிஸார் மேற்கொண்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் ஹெரோயினுடன் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அய்லப்பெரும பிரதேசத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 12 கிராம் 68 மில்லிகிராம் ஹெரோயினுடன் கோரகஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, கிராண்ன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாதம்மாவத்தை, தொட்டலங்க ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்ட இரு சுற்றிவளைப்புகளில் 17 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒருகொடவத்த, கொழும்பு 14 ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22, 31 வயதுடைய இருவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துன்கல்பிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 07 கிராம் 20 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா, துன்கல்பிட்டிய பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 07 கிராம் 20 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது நபரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.