திருமணத்திற்கு சென்ற வாகனம் கோரவிபத்து. ஒருவர் பலி.

கொழும்பு நோக்கி பயணித்த
வாகனம் விபத்து: ஒருவர் உயிரிழப்பு.
ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் வைத்தியசாலையில்

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற போது ஹயஸ் வாகனம் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 6 பேரில் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 22 வயது இளைஞன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். ஏனையவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பில் கல்கமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

விபத்திற்கு இலக்கான இரு வாகனங்களும் கல்கமுவ பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.