புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவுக்கு அலங்கார மீன்தொட்டி வழங்கி வைப்பு.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவுக்கு அலங்கார மீன்களுடன் கூடிய மீன்தொட்டி ஞாயிற்றுக்கிழமை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் புற்று நோயாளர்களின் மனங்களை ஆற்றுப்படுத்தும் நோக்குடன் மேற்படி சிகிச்சைப் பிரிவு நிர்வாகம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க குறித்த மீன் தொட்டி கையளிக்கப்பட்டுள்ளது.

இலண்டனில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் வர்த்தகப் பிரமுகரும், சமூக சேவகருமான கந்தப்பிள்ளை திலீபனின் நிதிப் பங்களிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட மேற்படி அலங்கார மீன்தொட்டியை அவரது சார்பில் எஸ்.ஸ்ரீகாந்த்,கலந்து புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவினரிடம் நேரடியாக வழங்கி வைத்தனர்.

மேற்படி நிகழ்வில் புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவு வைத்தியர், தாதியர்கள்,ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.