“சுபீட்சத்தின் நோக்கு” விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு.

ஜனாதிபதி அவர்களின் நாட்டைக் கட்டியெழுப்பும் “சுபீட்சத்தின் நோக்கு” தேசிய கொள்கைத் திட்டத்திற்கு அமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உழுந்து மற்றும் பயறு பயிர்ச்செய்கை திட்டத்தின் கீழ்,விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு (25.11.2021) துணுக்காய் பிரதேச செயலகத்தில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி , வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும், அமைச்சின் செயலாளர் கலாநிதி. அமல் ஹர்ச டீசில்வா, மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன்,மாவட்ட விவசாயப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்,உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.