யாழ்.கோட்டை வாசலில் உள்ள தேவாலயம் மீது இன்று அதிகாலை தாக்குதல்! ஒருவர் கைது..

யாழ்.கோட்டைக்கு அருகில் உள்ள கிறிஸ்த்தவ தேவாலயம் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதுல் நடத்தப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள குறித்த தேவாலயம் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்படுவதை அறிந்த பொலிஸார்

உடனடியாக சம்பவ இடத்தை முற்றுகையிட்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய கொட்டடி பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் மது போதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலின் பிண்ணனி தொடர்பில்

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.