பெண்ணை கடத்தியபோது டிப்பர் வாகனம் விபத்து. ஒருவர் உயிரிழப்பு.

இளம் பெண்ணைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். இளம் பெண்ணும், இன்னொருவரும் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் (6) இரவு நடந்துள்ளது. கண்டாவளை, புதுப்பாலம் பகுதியில் டிப்பர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் தடம்புரண்டு விபத்துள்ளானது.

விபத்தில் கிளிநொச்சி, நாகேந்திரபுரத்தைச் சேர்ந்த 17 வயதான ர.டிலக்சன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

கண்டாவளை, கரவெட்டித்திடலில் வசிக்கும் இளம் பெண்ணை, டிப்பர் வாகனத்தில் வந்த இருவர் கடத்திச் சென்றனர் என்று, படுகாயமடைந்த பெண்ணின் உறவினர்கள் கூறுகின்றனர்.

அந்த டிப்பர் வாகனத்தை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்றபோது, டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.