பிரியந்த குமாரவின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு 20 லட்சம் ரூபாய் பண உதவி.

பாகிஸ்தானில் அடிப்படைவாதிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் வீட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவுடன் பாராளுமன்ற குழு ஒன்று சென்றது.

இதன்போது பிரியந்த குமாரவின் இரு பிள்ளைகளுக்கும் அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 20 லட்சம் ரூபாய் பண உதவியும், ஒரு பிள்ளைக்கு மடிக்கணினி ஒன்றும் எதிர்க்கட்சித் தலைவரால் வழங்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவருடன் பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானும் இணைந்து இருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.