சிங்கப்பூரில் கொரோனா மானியம் பெற மோசடி செய்த இந்திய பெண்ணுக்கு சிறை தண்டனை.

சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ராஜகோபால் மாலினி (வயது 48). தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் அரசு வழங்கும் கொரோனா மானியத்தை பெறுவதற்காக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டார்.

அதுமட்டும் இன்றி தான் வேலை பார்த்து வந்த கட்டுமான நிறுவனத்தில் இருந்து 4,000 சிங்கப்பூர் டாலரை கையாடல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் ராஜகோபால் மாலினியை போலீசார் கைது செய்தனர். அவர் மீதான வழக்கு விசாரணை சிங்கப்பூர் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. அப்போது ராஜகோபால் மாலினி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்து இடமின்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து இந்த வழக்கில் அவருக்கு 16 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.