கம்பஹாவில் சட்டவிரோத மசாஜ் நிலையங்கள் முற்றுகை! 8 பெண்கள் உட்பட பேர் சிக்கினர்.

கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு மற்றும் சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அனுமதிப்பத்திரமின்றி நடத்திச் செல்லப்பட்ட இரு ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் நேற்றிரவு முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கம்பஹா, நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு, கட்டுவ பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி நடத்திச் செல்லப்பட்ட ஆயுர்வேத மசாஜ் நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த நிலையத்தை நடத்திச் செல்வதற்கு உடந்தையாக இருந்த 5 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம், தலாவ, நேகம்மன, பங்கதெனிய மற்றும் கதிர்காமம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 31, 32, 33, 35 மற்றும் 37 வயதுடைய ஐவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கம்பஹா, சீதுவ பொலிஸ் பிரிவில் அனுமதிப்பத்திரமின்றி ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட மற்றுமொரு மசாஜ் நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த நிலையத்தை நடத்திச் சென்ற நபரும் அதற்கு உடந்தையாக இருந்த மூன்று பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

களனிய, வீரவில, லுணுவில மற்றும் தளுப்பனே ஆகிய பிரதேசங்களை ச் சேர்ந்த நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.