நுவரெலியா மாவட்ட செயலகத்தில் விசேட இரத்த தான முகாம்.

நுவரெலியா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 5 வருட காலமாக நுவரெலியா வை. எம். எம். ஏ. கிளையினால் நடத்தப்படும் விசேட இரத்த தான முகாம் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நுவரெலியா வை. எம். எம். ஏ. கிளையின் தலைவர் ஏ. ஆர். நவாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை வை.. எம். எம். ஏ. பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம். ரிஸ்மி மற்றும் நுவரெலியா மாவட்ட மேலதிக செயலாளர் திருமதி சுஜீவா போதிமான ஆகியோர் கலந்து கொண்டனர்.

சர்வ சமய தலைவர்களின் ஆசீவாதங்களுடன் நடைபெற்ற இநநிகழ்வில் மாகாந்துர ரத்ன வஹன்ச ஹிமி, ஆனா கிருசாந்தன் குருக்கள், மௌலவி எம். எல். முஸம்மில், வண பிதான டக்லஸ், மாவட்ட செலயகத்தின் அரச கருமொழிகள் திணைக்கள ஆணையாளர் அகில இலங்கை வை. எம். எம். பேரவையின் உப தலைவர் இஹ்சான் ஹமீட், பொருளாளர் பாசில், நுவரெலியா மாவட்டப் பணிப்பாளர் ஜீ. அப்துல் றஹீம் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.