கோடி பணத்தோடு “சர்வைவர்” ஷோவில் விஜயலட்சுமி வெற்றி : அர்ஜுனுக்கு கொரோனா

ZeeTamil நடத்திய “சர்வைவர்” தொடரான ரியாலிட்டி ஷோவில் விஜயலட்சுமி வெற்றி பெற்றுள்ளார்.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த சர்வைவர் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார்.

ஃபைனலிஸ்ட்டிற்காக நடத்தப்பட சவாலான போட்டியில் இறுதிவரை சரணும், விஜியும் சுமார் 70 நிமிடங்களுக்கு மேல் தாக்கு பிடித்த நிலையில் ஒரு கட்டத்தில் நடிகர் சரண் தாக்கு பிடிக்க முடியாமல் தண்ணீரில் விழுந்தமையால் விஜயலட்சுமி வெற்றி பெற்றார்.

.

வெங்கட் பிரபு இயக்குனராக அறிமுகமான சென்னை 28 படத்தில் ஹீரோயின் கேரக்டர் மூலம் நடிக்க வந்தவர் விஜயலட்சுமி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் விஜயலட்சுமி நடித்தார். பிறகு டிவி சீரியலிலும் சில காலம் நடித்த விஜயலட்சுமி, தற்போது சிம்புதேவன் இயக்கிய கசட தபற படத்திலும் நடித்துள்ளார்.

ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 2 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட விஜயலட்சுமி, தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.

சாகசங்களை மையமாகக் கொண்ட இந்த போட்டியில் விஜயலட்சுமி, லட்சுமி பிரியா சந்திரமெளலி, விக்ரந்த், நந்தா, காயத்ரி ரெட்டி, ஸ்ருஷ்டி டாங்கே, உமாபதி ராமைய்யா, பெசன்ட் ரவி, பார்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டி ஆப்பிரிக்க காடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், பாடகர்கள், உடற்பயிற்சியாளர்கள் என பல தரப்பட்டவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

ஒரு கோடி பரிசு
கிட்டதட்ட பிக்பாஸ் போட்டியை போல் போட்டியாளர்கள் தங்களின் மொபைல் போன் உள்ளிட்ட தொலைத் தொடர்பு சாதனங்களை ஒப்படைத்து விட வேண்டும். இயற்கை சூழ்ந்த தீவில் 90 நாட்கள் தங்க வேண்டும். போட்டியாளர்களின் மன வலிமை மற்றும் உடல் வலிமையை பரிசோதிக்கும் வகையில் நாளுக்கு நாள் கடுமையான டாஸ்க்குகள் வழங்கப்படும். இதில் வெற்றி பெறுபவருக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும்.

விஜயலட்சுமியின் நீண்ட நாள் நண்பரான ஃபெரோஸ் முகம்மது, விஜயலட்சுமியை 2015 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஒரு மகன் உள்ளான். அடிக்கடி தனது வாழ்க்கை நிகழ்வுகளை ஃபோட்டோ மற்றும் வீடியோவாக சோஷியல் மீடியாவில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் விஜயலட்சுமி, குடும்ப பெண்ணாலும் சாதிக்க முடியும் எனும் திடத்தோடு விளையாடி வெற்றி பெற்றுள்ளார்.

அர்ஜுனுக்கு கொரோனா

சர்வைவர் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கிய ஆக்ஷன் கிங் அர்ஜுன் , தனக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் இந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் தற்போது அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் தான் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும், தன்னோடு தொடர்பு இருந்தவர்களையும் பரிசோதனை செய்யக் கோரியும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.