மனித உரிமைகள் ஆணையம் பெற்ற புகார்கள் எவ்வளவு? மக்களவையில் தகவல்

தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 4 ஆண்டுகளில் பெறப்பட்ட புகார்கள் குறித்து மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், மனித உரிமைகள் ஆணையம் பெறப்பட்ட புகார்கள் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்டது.

இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில்,

தேசிய மனித உரிமைகள் ஆணையம் 2018 – 19இல் 89,584 புகார்கள், 2019 – 20இல் 76,628 புகார்கள், 2020 -21இல் 74,968 புகார்கள், 2021 -22(நவ.15 வரை) 67,255 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.