துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இராணுவச் சிப்பாய் உயிரிழப்பு.

காலி, ரன்தம்பே இராணுவக் கல்லூரியில் கடமையாற்றி வந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

குறித்த இராணுவச் சிப்பாய் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கம்பளை, டஸ்பியா தோட்டத்தைச் சேர்ந்த 21 வயது இராணுவச் சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ரன்தம்பே இராணுவப் பயிற்சி பாடசாலை அதிகாரிகளால் தெல்தெனிய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இராணுவ முகாமில் உள்ள பல அதிகாரிகளிடம் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.