மாகாண சபை தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க முடிவு?

மாகாண சபை தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அமைச்சரவைப் பத்திரம் கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், திங்கட்கிழமை (13) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அது எடுத்துக்கொள்ளப்படவில்லை.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் ஆகியோருடன் கலந்துரையாடியதன் பின்னர் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரியவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.