அக்கராயன் புகையிரத கடவை விபத்தில் ஒருவர் பலி.

மாங்குளத்தில் இன்று நடந்த ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 6 மணியளவில் நடந்துள்ளது.

முறிகண்டி – அக்கராயன் வீதியில் உள்ள ரயில் கடவையில் இந்த விபத்து நடந்துள்ளது.

முழங்காவிலைச் சேர்ந்த 50 வயதுடைய பி.பத்மசீலன் என்பவரே உயிரிழந்துள்ளார். இரு பிள்ளைகளின் தந்தையான இவர் எக்காளத்தொனி திருச்சபை ஊழியர் என்று தெரியவருகின்றது.

முறிகண்டியில் இருந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர் வீதியில் திரித்து நின்ற டிப்பர் வாகனம் ஒன்றைக் கடந்து ரயில் கடவையைக் கடக்க முயன்றபோது, ரயில் அவரை மோதியது என்று சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் அவர் கிளிநொச்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த ரயில் கடவை பாதுகாப்பற்ற ரயில் கடவை என்றும், அந்தப் பகுதியில் பாதுகாப்பான ரயில் கடவை ஒன்று அவசியம் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக ரயில் திணைக்கள பொலிஸாரும், மாங்குளம் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.