அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று 5 மாவட்டங்களில் ஆரம்பித்த வேலைநிறுத்தை நாளை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார், திருகோணமலை, இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இன்று குறித்த சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இதனையடுத்து நாளை காலை 8 மணி முதல் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.