மேல் மாகாணத்தில் 7,810 பேர் சோதனை! – 1,831 பேருக்கு எச்சரிக்கை.

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறுவோரை கண்காணிக்கும் நடவடிக்கை கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், நேற்று 7 ஆயிரத்து 810 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 1,831 பேர் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

778 பொலிஸார் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது 3 ஆயிரத்து 21 மோட்டார் சைக்கிள்களும், 2 ஆயிரத்து 645 ஓட்டோக்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

7 ஆயிரத்து 810 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவர்களில் 1,831 பேர் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.