இன்று நள்ளிரவு முதல் சாதாரண ரயில் டிக்கெட்டுகள் வழங்கல் நிறுத்தம்

இன்று நள்ளிரவு முதல் ரயில் பயணச்சீட்டுகளை வழங்குவதில்லை என நிலைய அதிபர்கள் தீர்மானித்துள்ளனர்.

 

அதன்படி, முன்கூட்டியே இருக்கைகளை முன்பதிவு செய்ய வேண்டிய இன்டர்சிட்டி ரயில்களைத் தவிர சாதாரண ரயில் டிக்கெட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும் என முடிவாகியுள்ளது.

பார்சல் போக்குவரத்தை நிறுத்த நேற்று முடிவு செய்திருந்தனர்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன, புகையிரத பொது முகாமையாளருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததாக தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.