அரச ஊழியர்களுக்கு ரூ 4,000 முற்கொடுப்பனவு….

அனைத்து அரச ஊழியர்களுக்கும், 2022 ஜனவரி முதலாம் திகதி 4,000 ரூபா விசேட முற்பணத் தொகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான சுற்றுநிரூபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பொது சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விசேட முற்பணத் தொகையை வழங்கும் நடவடிக்கை ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 28ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.