திருநங்கையாக மாறிய மகன். ஆள் வைத்து அடித்து கொலை செய்த தாய்!

சேலம் மாநகர் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உமாதேவி (45). இவர் கணவரை பிரிந்து வசித்து வருகிறார்.

இவரது மகன் நவீன்குமார் (19). நவீன்குமார் சமீபத்தில் திருநங்கையாக மாறி தனது பெயரை அக்க்ஷிதா என மாற்றிக் கொண்டார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நவீன்குமார் வீட்டின் அருகே உள்ள ஒரு முட்புதரில் காயங்களுடன் கிடந்ததாகவும், அவரை மீட்ட தாய் உமாதேவி அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார் என கூறப்படுகிறது.

சிகிச்சை பெற்று வந்த நவீன்குமார் சிகிச்சை பலனின்றி கடந்த இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

இந்நிலையில், சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தாய் உமாதேவி மீது சந்தேகம் ஏற்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர் கூறியதாவது:

எனது கணவர் பிரகாஷ், 17 ஆண்டுக்கு முன் பிரிந்ததால், எனது ஒரே மகனை பாசமாக வளர்த்து, பாலிடெக்னிக் படிக்க வைத்தேன்.

அவர், கூடா நட்பால் திருநங்கையாக மாறி, வீட்டுக்கு வருவதை தவிர்த்தார்.

பலமுறை அறிவுறுத்தியும் திருந்தவில்லை.

உறவினர்கள், கேலி பேசினர். கை, காலை உடைத்து, உட்கார வைத்து கஞ்சி ஊத்து என, சிலர் அறிவுறுத்தினர்.

அதன்படி, ஆட்களை வைத்து, காலை உடைத்து சிகிச்சைக்கு சேர்த்தபோது எதிர்பாராத விதமாக இறந்து விட்டார் என கூறினார்.

இதையடுத்து தாய் உமாதேவியை கைது செய்த போலீசார், வெங்கடேஷ், காமராஜ், கார்த்திகேயன், சந்தோஷ், சிவக்குமார் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து கொ.லை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இச் சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.