திருக்கோயில் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர் தப்பிச் சென்று தாயாரை உச்சி முகர்ந்த பின்னர் பொலிசில் சரண்!

திருக்கோவில் பொலிசில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தமிழர் முஸ்லிம் என இரு பொலிசாரும் சிங்களவர் இருவருமாக நால்வர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளனர்

உயிரிழந்தவர்கள் பாண்டிருப்பை சேர்ந்த நவீனன் மற்றும் ஒலுவிலை சேர்ந்த அப்துல் காதர் , பிபில மற்றும் சியம்பலாண்டுவ பிரதேசங்களை சேர்ந்த துசார, பிரபுத்த என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட பொலிஸ் சார்ஜன் இரு துப்பாக்கிகள் மற்றும் 19 ரவை கூடுகளுடன் அவரது சொந்த வாகனத்தில் தப்பிச் சென்று தனது தாயாரைப் பார்த்து உச்சி முகர்ந்த பின்னர் அவரது சொந்த ஊரான மொனராகலை மாவட்டத்தின் எதிமலை பிரதேச பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தை அடுத்து குறித்த பொலிஸ் நிலையம் விசேட அதிரடிப் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.