இளவாலையில் இளைஞரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு.

இளவாலை சந்தியில் உள்ள காணிக் கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளரின் கொல்வின் (வயது- 32) என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் சிலருடன் இணைந்து விருந்தில் கலந்துகொண்டிருந்த குறித்த இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

இளைஞர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளாரா? என்று பொலிஸாரிடம் கேட்ட போது, விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.