ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

35 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, அவிசாவளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானியன்கம பிரதேசத்தில், அவிசாவளை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.