கத்தோலிக்க மதகுருக்கள் ஓட்டிச் சென்ற வாகனம் மீது கிளிநொச்சியில் தாக்குதல்..

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நத்தார் பண்டிகையை முடித்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த கத்தோலிக்க மதகுருமார்கள் சென்ற காரை தாக்கிய மூவரை தர்மபுரம் பொலிஸார் கடந்த 28 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.

தருமபுரம் மைல்வாகனமபுரம் பகுதியில் நத்தார் விழாவொன்றில் கலந்து கொண்ட கத்தோலிக்க மதகுருமார்கள் நேற்று முன்தினம் (27) இரவு 10 மணியளவில் திரும்பிக் கொண்டிருந்த போது இளைஞர்கள் குழுவொன்று அவர்கள் பயணித்த கார் ஒன்றை மறித்துள்ளனர்.

இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பாதிரியார்கள் பயணித்த காரை இளைஞர்கள் தாக்கி காரை சேதப்படுத்தியுள்ளனர். தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிகிறது.

குறித்த தாக்குதல் தொடர்பில் தர்மபுரம் பொலிஸில் மதகுருமார்கள் முறைப்பாடு செய்ததையடுத்து, இன்று (28) காலை சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தாக்குதலில் மற்றுமொரு சந்தேகநபர் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.