பசிலின் ஆட்டம் ஆரம்பம் : ஹக்கீம் மற்றும் ரிஷாட்டின் எம்.பி.க்களை வளைத்து போட திட்டம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து தனியான முஸ்லிம் கூட்டணியை உருவாக்கத் தீர்மானித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து உருவாக்கவுள்ள புதிய கூட்டணியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

பசில் ராஜபக்ஷ தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக தெரியவருகிறது.

இதன்படி இரண்டு கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் மாத்திரமே பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கட்சிகள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளமையால் , அவர்களை வைத்து தனியொரு கூட்டணியை அமைக்க பசில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.