நாடாளுமன்றத்தை உடன் கூட்டுங்கள்! – அரசிடம் கிரியெல்ல வலியுறுத்து.

“நாடாளுமன்றத்தை அரசு உடனடியாகக் கூட்ட வேண்டும்.”

– இவ்வாறு அரசிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான லக்ஸ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாடாளுமன்றத்தை மூடாமல் கூட்டத் தொடரை நடத்துவதே அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு அனைத்து எம்.பிக்களும் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விடயத்தில் சபாநாயகர் மௌனம் காக்கக்கூடாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.