செயற்கை சூரியனை கண்டுபிடித்து உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சீனா.

இயற்கை சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பம் கொண்ட செயற்கை சூரியனை சீனா கண்டுபிடித்துள்ளது.

ஏழு கோடி டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தொடர்ந்து 17 நிமிடங்கள் ஒளி வீசி, இந்த செயற்கை சூரியன் கண்டுபிடிப்பு, உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சீனா கடந்த 1999-ம் ஆண்டிலிருந்தே ஈஸ்ட் என்ற பெயரில் செயற்கை சூரியனை உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, ரூ.70 லட்சம் கோடி வரை செலவிட்டுள்ளது.

ஆரம்பத்தில், மிக குறைந்த நேரம் மட்டுமே குறைந்த அளவிலான வெப்பத்தை மட்டுமே இந்த செயற்கை சூரியன் உற்பத்தி செய்தது. இதை படிப்படியாக மேம்படுத்திய சீன விஞ்ஞானிகள், சில தினங்களுக்கு முன் 7 கோடி டிகிரி செல்சியசிஸ் வெப்பத்தை உருவாக்கியுள்ளனர்.

இது சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பமாகும். மேலும் தொடர்ந்து 17 நிமிடங்கள் இந்த வெப்பநிலை நீடித்தது. பொதுவாக சூரிய சக்தியானது அணுக்கரு இணைவு மூலம் உருவாகின்றது.

சூரியனின் மையப் பகுதி, ஹைட்ரஜன் கருக்களை ஹீலியத்துடன் இணைப்பதன் மூலம் ஒன்றரை கோடி டிகிரி செல்சியஸ் வெப்பத்தை ஏற்படுத்துகிறது. இது, பல வகைகளில் மனித இனத்துக்கு பலனை அளித்து வருகின்றது.

சுத்தமான எரிசக்தியை தயாரிப்பதற்கான சீனாவின் இந்த செயற்கை சூரியன் திட்டத்துக்கு உலகளவில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பிற்கு எப்படி ஆதரவு கிடைக்கிறதோ, அதே அளவுக்கு எதிர்ப்புகளும் கிளம்பும். சீனா இந்த திட்டத்தை தீய நோக்கங்களுக்கு பயன்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சில நாடுகள் தங்களின் அச்சத்தை தெரிவித்து இருக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.