குட்டித் தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிராக மைத்திரி போர்க்கொடி!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசின் திட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

உரிய காலப்பகுதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடங்களுக்கு நீடிப்பதற்கான அதிகாரம் துறைசார் அமைச்சருக்கு இருக்கின்றது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி அவர் வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடவுள்ளார்.

அவ்வாறு வெளியிட்டால் தேர்தலும் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படும். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தேர்தல் ஒத்திவைப்புக்கு மைத்திரிபால போர்க்கொடி தூக்கியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.