சின்ன தேர்தலை 2023 வரை நீடிக்க வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

தற்போது இயங்கி வரும் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை அடுத்த வருடம் (2023) மார்ச் 19 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இது தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தலை அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் மார்ச் 19, 2023 வரை செயற்படும்.

Leave A Reply

Your email address will not be published.