துறைமுக நகர கடற்கரையில் காணப்படும் முதலை.

கொழும்பு துறைமுக நகர கடற்கரையில் முதலையின் நடமாட்டம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கொழும்பு துறைமுக நகர கடற்கரையில் முதலை இருந்தமையை காட்டும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கல்கிஸ்சை பிரதேசத்தில் அண்மையில் சுழியோடி ஒருவரை தாக்கிய முதலையே நேற்றைய தினம் துறைமுக நகர கடற்கரையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது முதலையை அங்கிருந்து விரட்டும் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் அவ்வப்போது காணப்படும் இந்த முதலை மனிதர்களை தாக்கும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்கிஸ்சை, தெஹிவளை கடற்பகுதியில் அண்மையில் வண்ண மீன்களை பிடிக்கும் சுழியோடியை இந்த முதலை தாக்கியதுடன் சம்பவத்தில் படுகாயமடைந்தவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.