யானையும் மொட்டும் இரகசிய ஒப்பந்தம்! ராஜபக்சக்களுக்கு கை கொடுத்த ரணில்!

பதுளை சபையின் தலைவர் நியமனத்தின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு இடையில் இரகசிய அரசியல் ஒப்பந்தம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதுளை தலைவரை நீக்குவதற்கு ஊவா மாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளதாகவும் புதிய தலைவர் இன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதன்படி, தற்போதைய உப தலைவரை அப்பதவிக்கு நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து இன்று கிடைத்த செய்தியில், மொட்டுவின் முன்னாள் தலைவரை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளிடம் கோரப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து கிடைத்த உத்தரவின்படி, மீண்டும் நீக்கப்பட்ட அதே தலைவர் அதே பதவிக்கு நியமிக்கப்பட உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.