எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து!

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூக நீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன.

அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது என தனது ட்விட்ட பக்கத்தில் பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105-ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பிலும் சிறப்பு விழா ஒழுக்கமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.