எத்தனோல் கடத்தல்காரரை கட்டுநாயக்க VVIP முனையம் மூலமாக அழைத்து போன பிரமுகர்கள்….

டுபாயில் மறைந்திருந்து , தேடப்பட்டு வந்த எத்தனோல் கடத்தல்காரரான ஜயலத் கிருசாந் என்பவரை , பாராளுமன்ற உறுப்பினரான மதுர விதானகே டுபாயிலிருந்து அழைத்து வர , அவரை கட்டுநாயக்க VVIP முனையம் மூலமாக பாதுகாப்போடு அழைத்து சென்ற இராஜாங்க அமைச்சர் அருண்திக்க பர்ணாந்து ஆகியோர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்துத் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜிஎம் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமையவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

விசாரணையின் பின்னர் இது தொடர்பான அறிக்கைகள் எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.