அபுதாபி விமான நிலையத்தில் தாக்குதல் ; 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் பலி.

அபுதாபியில் டுரோன் மூலம் தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு ஈரானை சேர்ந்த ஹவுத்தி அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் டுரோன் மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதற்கு, ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த தாக்குதலில் விமான நிலையம் அருகே 3 எண்ணெய் டாங்கர்கள் தீப்பிற்றி வெடித்து சிதறின.

விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடக்கும் இடத்தில் தீப்பற்றியதாக தெரிய வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.