புலமைப்பரிசில் பரீட்சை தோற்றவுள்ள மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் நல்வாழ்த்து!

2022 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் மன உறுதியை வலுவூட் டும் வகையில் அவர்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிப்பதற்காக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன கொழும்பு நகரில் உள்ள சில பாடசாலைகளுக்கு விஜயம் செய்தார்.

நாட்டில் நிலவும் கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் நடத்துவதற்கு முடியாது போன 2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்முறை எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த பரீட்சையில் 3 இலட்சத்து 40 ஆயிரத்து 508 மாணவர்கள் 2,943 மத்திய நிலையங்களில் தோற்றவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.