சட்டவிரோத மண்ணகழ்வு நடவடிக்கையினை கட்டுப்படுத்துவதற்கான களவிஜயம்.

கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மணல் அகழ்வு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமன்றி இரணைமடுவின் கீழ்நிலைப்பகுதிகளில் வெள்ளப்பாதிப்பினையும் ஏற்படுத்தும் அபாயநிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலைமை தொடருமாயின் எதிர்காலத்தில் வெள்ளத்தை கட்டுப்படுத்துவது சவாலாக அமையும் இதன் காரணமாக உடனடியாக சட்டவிரோத மண்ணகழ்வினை தடுக்கும் வழிவகைகளை மேற்கொள்ளும்பொருட்டாக இன்றைய களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.

களவிஜயத்தில் கிளிநொச்சி மாவட்டச்செயலக, அதிகாரிகள்,மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ பிரிவினர்,பிரதேச செயலாளர்,நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள்,இராணுவத்தினர்,பொலீசார் மற்றும் மாவட்டச்செயலக உத்தியோகத்தர்கள் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.