கொழும்பு துறைமுக நகரில் ஈழத்து பனை மரங்கள் நாட்டும் செயற்றிட்டம்.

கொழும்பு துறைமுக நகரில் (Colombo Port city) ஈழத்து பனை மரங்கள் நாட்டும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சீனத்தூதுவரின் அண்மைய வடக்கு விஜயத்தின் பின்னர் இத் திட்டமானது நடைபெறுகின்றது. துறைமுக நகரின் அழகிற்கு அங்கு தென்னை நாட்டப்பட்டுள்ளது. அத்துடன் பனை மரங்களும் வரிசைக்கு நாட்டும் செயற்றிட்டம் இடம்பெறுகின்றன.

இத்திட்டத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்துறை ஆராய்ச்சியாளரும் ஆரம்பகால புத்தாக்குனருமான சகாதேவனால் செயற்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்துக்கு பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணாண்டோ, பனை அபிவிருத்திச் சபை தலைவர் கிருஸ்ணாநந்த பத்திராஜா, பனை ஆராய்ச்சி நிலையத்தின் பிரதி பொதுமுகாமையாளர் ஸ்ரீ வயிந்திரன் ஆகியோர் ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.