கொரோனா போன்ற தொற்று நோய்களை எதிர்கொள்ள மக்கள் பழகிக் கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் எதிர்பாராத நேரத்தில் வந்த ஒரு தொற்று நோய் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இது போன்ற தொற்று நோய்களை எதிர்கொள்ள சமுதாயம் பழக வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய தலைமுறையினரோ அல்லது முந்தைய தலைமுறையினரோ உலகளாவிய தொற்று நோயை எதிர்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

உலகில் கைத்தொழில் புரட்சி மற்றும் தொழில்நுட்பப் புரட்சி என்பன தொற்று நோய்களுடன் இணைந்துள்ள தாகவும், இந்தத் தொற்றுநோயை எதிர்கொள்ளும் வகையில் ஒரு சமூகம் ஒரு நாடாக முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.