இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவது தொடர்பான கலந்துரையாடல்.

இலங்கையில் இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வினை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் கூட்டம் மன்னார் மாவட்ட செயலாளர்.திருமதி அ. ஸ்ரான்லி அவர்கள் தலைமையில் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

கடந்த வருடங்களில் கொரோனா தொற்று காரணமாக சுதந்திர தின நிகழ்வு மட்டுப்படுத்தப்பட்ட அளவு அதிகாரிகளுடன் மாவட்ட செயலகத்தில் உள்ளேயே நடைபெற்றது தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் சிறிதளவு குறைவடைந்து இருக்கும் இந்த நிலையில் இலங்கையின் 74வது சுதந்திர தின நிகழ்வை மிகவும் சிறப்பாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

அந்த வகையில் மன்னார் பாலத்தடி இலிருந்து முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் பாடசாலை மாணவர்கள் மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள் உடன் ஆரம்பமாகி மன்னார் மாவட்ட செயலகத்தில் நிகழ்வுகள் நடைபெற உள்ளது

அதற்கு முன்பதாக மன்னார் பாலத்தடியில் கடற்கரை பகுதியில் பாரிய சிரமதானம் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் அவர்கள் தெரிவித்தார்

இந்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர்கள் மன்னார் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் முப்படையினரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.