56 இந்திய மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 56 இந்திய மீனவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ் குடாநாட்டு நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இந்த மீனவர்கள் டிசம்பர் நடுப்பகுதியில் மன்னாருக்கு தெற்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் செய்தியில் இந்த முடிவு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளது.

அந்த ட்விட்டர் செய்தியின் அடிப்படையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் , மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததற்காக இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவரது குழுவினரையும் பாராட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.