மாம்பழம் சந்தியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார்.

யாழ்ப்பாணம் அரியாலை மாம்பழம் சந்தியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த வீட்டு மதிலுடன் மோதி கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று (25) இரவு 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பிரபல தனியார் ஹொட்டலில் இருந்து வைத்தியர்கள் சிலர் குறித்த காரில் கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. எனினும் விபத்தின் போது சிறு காயங்களுடன் தப்பினர்.

இவ்வாறு காயமடைந்து மயக்கமடைந்த நிலையில் இருந்த ஒருவரை நோயாளர்காவு வண்டியில் ஏற்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.